Home Archive by category

கருணாநிதி நினைவுச் சின்னம் தமிழக மக்களுக்கே பெருமை என்கிறார் அழகிரி

மகாராஷ்டிராவில் சிவாஜிக்காக நடுக்கடலில் மூவாயிரம் கோடி ரூபாய் செலவில் சிலை அமைக்கிறார்கள்.அதுபோன்று, தமிழ்நாட்டில் மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் அமைப்பது  தமிழா்களுக்கே பெருமை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், 

‘கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி முகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ராகுல் காந்தியின் நேர்மறையான அரசியல் வெற்றி பெற்று கொண்டு இருக்கிறது என்பது இதற்கு சான்று. ராகுல் காந்தி மாபெரும் மக்கள் செல்வாக்கை பெற்று வருகிறார் என்றும் தெரிவித்தார்.

மேலும், ’கருணாநிதிக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்வதில் என்ன தவறு. மகாராஷ்டிராவில் சிவாஜிக்காக நடுக்கடலில் மூவாயிரம் கோடி ரூபாய் செலவில் சிலை அமைக்கிறார்கள். அது போல் எளிய தமிழரான கருணாநிதி வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார். எனவே அவருக்கு சிலை அமைப்பதில் தவறில்லை. கருணாநிதியை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான் அவரை ஐந்து முதல் முதலமைச்சராக தேர்வு செய்தனர். கருணாநிதிக்கு சிலை எழுப்புவது என்பது வரவேற்க கூடியது என்றும் கூறினார்.

Related Posts