Home Archive by category

அமெரிக்கர்களுக்கு காலக்கெடு - 48 மணி நேரத்துக்குள் வெளியேற உத்தரவு

சூடானில் வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலை வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரினே ஜீன் பெரைரா வெளியிட்டுள்ளார்.

சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு மோதல்கள் முடிவுக்கு வரவில்லை என்பதால் அங்கு அமெரிக்கர்கள் வசிப்பது பாதுகாப்பில்லை என்பதாலேயே குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சூடானின் தற்போதை நிலை மிகவும் மோசமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், சூடானில் சண்டையிட்டு வரும் இரு இராணுவ குழுவினரும் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

Related Posts