இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.
சுமத்ரா தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்கு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உள்ளூர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.