Home Archive by category

செவ்வாய்க்கிழமை வடக்கு, கிழக்கு முழுமையாக முடங்கும்

செவ்வாய்க்கிழமை வடக்கு, கிழக்கு முழுமையாக ஸ்தம்பிதம் அடையும் எனவும், வர்த்தகர்கள் அனைவரும் கடைகளை மூடி முழுமையான எதிர்ப்பை அரசாங்கத்துக்கு வெளியிடவுள்ளதாகவும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

எதிர்வரும் 25 ஆம் திகதி பொது வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு உள்ளிட்ட முழுமையான ஹர்த்தால் மேற்கொள்ளப்படும் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கட்சிகள், பொது நிறுவனங்கள், தொழிற் சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட அனைவரும் இணைந்து இந்த ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts