Home Archive by category

கனடிய கடவுச்சீட்டு தொடர்பாக வெளியாகியுள்ள அரசாங்கத்தின் அறிவிப்பு

கனேடிய கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக காத்திருப்பவர்கள் தொடர்பில் அந்நாட்டு சமூக அபிவிருத்தி அமைச்சர் கரீனா கோட் (Karina Gould) விசேட அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.

போலியாக விமான டிக்கெட்களை முன்பதிவு செய்து கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

சிலர் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கு இவ்வாறான குறுக்கு வழிகளை பயன்படுத்துவதாக தகவல் கிடைக்க பெற்றுள்ளது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இவ்வாறு தேவையற்ற வகையில் அவசரப்படுவதனால் கடவுச்சீட்டு பெறுவதற்கான காத்திருப்பு பட்டியல் நீண்டு செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

கடந்த சில மாதங்களாக கனடாவில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக காத்திருப்போரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.

கடவுச்சீட்டு அலுவலகத்தினால் விண்ணப்பதாரிகளுக்கு கடவுச்சீட்டுகளை வழங்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது.


இவ்வாறான ஒரு பின்னணியில் போலியான அடிப்படையில் கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ள மக்கள் முனைப்பு காட்டக் கூடாது என அமைச்சர் கோல்ட் (Karina Gould)  வலியுறுத்தியுள்ளார்.

தற்பொழுது கடவுச்சீட்டுக்காக காத்திருப்பு காலம் வெகுவாக குறைந்து விட்டதாகவும் கடவுச்சீட்டு விநியோக நடைமுறைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர்  (Karina Gould) தெரிவித்துள்ளார்

Related Posts