கனடாவில் 42 பேர் அதிரடியாக கைது
கனடாவில் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய 42 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த 42 பேருக்கு எதிராகவும் சுமார் 400 குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சுமார் ஓராண்டு காலமாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 173 துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும் சந்தேக நபர்களிடமிருந்து பாரிய அளவிலான போதை பொருட்கள் பணம் மற்றும் ஆயுதம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.