Home Archive by category

அன்னை பூபதியின் நினைவேந்தல்

அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் பல்கலை மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது.

இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும் அடாவடிகளையும் நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்திருந்தார் அன்னை பூபதி.

உலகம் பெண்ணியம் பேசிக் கொண்டிருந்த காலத்தில் பெண்ணியத்தை விஞ்சிய சக்தியைக் காட்டிய அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகம் எங்கும் தாண்டியும் புலம்பெயர் தேசங்களிலும் நினைவேந்தப்பட்டுள்ளது.

இன்று யாழ்.பல்கலையில் இடம்பெற்ற நினைவேந்தலில், பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts