Home Archive by category

வடக்கு, கிழக்கில் தொடர் போராட்டத்திற்கு ஏற்பாடு

தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை நிறுத்தக்கோரி வடக்கு, கிழக்கில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள், மத தலைவர்கள், சிவில் மைப்புக்கள், தொழிற்சங்கங்கள் ஆகியன இப் போராட்டத்தை ஒன்றிணைந்து முன்னெடுப்பதற்கு இணக்கப்பாட்டை எட்டியுள்ன.

இம்மாதத்தின் மூன்றாம் வாரத்தில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் முதலாவதாக முன்னெடுக்கப்பட்டு கணிசமான இடைவெளிகளில் வடக்கு, கிழக்கின் ஐந்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தப்போராட்டங்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக இளம் அரசியல் தலைவர்கள் ஐவர் அடங்கிய ஏற்பாட்டுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவில், கலாநிதி.க.சர்வேஸ்வரன், குருசுவாமி சுரேந்திரன், பாலச்சந்திரன் கஜதீபன், சேனாதிராஜா கலையமுதன், சுவீகரன் நிஷாந்தன் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த போராட்டத்தினை மிகப்பாரிய அளவில் முன்னெடுப்பதற்காக, இதுவரையில் பல்வேறுபட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related Posts