யாழில் பாரிய போராட்டத்துக்கு அழைப்பு

எதிர்வரும் சனிக்கிழமை(1) போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்று (29) ஊடக சந்திப்பொன்றை நடத்தி அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட விடயங்களுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையிலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.