Home Archive by category

ராகுல் காந்திக்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் போராட்டம்

நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து ராகுல் காந்தி நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுதழுவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து குறித்த போராட்டம் இடம்பெறுகின்றது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அவதூறு ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், 30 நாள் பிணை வழங்கிய சூரத் நீதிமன்றம், மேன்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts