Home Archive by category

நாட்டில் நிலவும் உணவுத் தட்டுப்பாடு- அணில்களை உண்ணும் மக்கள்

உணவுத்தட்டுப்பாடு காரணமாக அணில்களை உண்ணும் பிரித்தானியர்கள்: ரஷ்ய தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தி

பிரித்தானியாவில் கடுமையான உணவுத்தட்டுப்பாடு காணப்படுவதாகவும் , அதனால் பிரித்தானியர்கள் பட்டினியால் வாடி பசி போக்குவதற்காக  வழிகளின்றி அணில்களை உண்ணுவதாகவும் ரஷ்யாவின்  தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவானது  பணத்தை முழுவதுமாக உக்ரைனுக்கு உதவுவதற்காக செலவு செய்வதால், பிரித்தானியர்களிடம் பணத்தட்டுப்பாடு நிலவுவதாகவும், ஆகவே, அவர்கள் வேறு வழியில்லாமல் அணில்களை பிடித்து உண்ணுவதாகவும் ரஷ்ய அரசுத் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது .

இவ்வாறான அதிர்ச்சி  தகவலை, ரஷ்யாவின்  அரசுத் தொலைக்காட்சியில் '60 minutes' என்னும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் Olga Skabeyeva என்னும் பெண் வெளியிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியாவில் உணவுத் தட்டுப்பாடு நிலவுவதால், பிரித்தானிய உணவகங்களில் அணில்கள் உணவாகப் பரிமாறப்படுவதாக தெரிவித்துள்ளார். 

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதிலிருந்து பிரித்தானியா பின்வாங்கவில்லை என்று கூறியுள்ள அவர், ஆகவே, தாம்  அணில்களை உண்டாலும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தமாட்டார்கள் என்று  பிரித்தானியர்கள் கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  Olga Skabeyeva, புடினுடைய தீவிர ஆதரவாளர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

Related Posts