Home Archive by category

குருந்தூர்மலையில் அடாத்தாக கட்டப்பட்ட விகாரை - இது தான் பௌத்த தர்மமா!

முல்லைத்தீவு குருந்தூர்மலைப் பகுதியில், நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த தேரர்களின் அனுசரணையுடன் விகாரை அமைத்து முடிக்கப்பட்டமையானது, பௌத்த தர்மம் அதன் போதனைகள் இலங்கை அரசியல் அமைப்பின் பிரகாரம் உருவாக்கப்பட்ட சட்டங்களை மீறும் வகையில் பெளத்த தேரர்கள் செயற்பட்டமை நேரடியாகப் புலப்படுகிறது என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

குறித்த செயற்பாடானது, நீதிமன்றத்தை அவமதிக்கும் ஒரு செயலாக பார்ப்பதோடு பௌத்த மதத்தையும் அவமதிக்கும் ஒரு செயலாகப் பார்க்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“குருந்தூர் மலையில் விகாரை அமைக்கும் பணியை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் அதனையும் மீறி விகாரை அமைத்து முடித்தமை பௌத்த தர்மமா?

குருந்தூர் மலையில் சட்ட விரோதமான முறையில் விகாரை அமைப்பது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் விகாரை அமைக்கும் பணியை நிறுத்துமாறு காவல்துறையினருக்கு தடை உத்தரவு வழங்கி இருந்தது.

இவ்வாறான நிலையில் சட்ட விரோதமான முறையில் நீதிமன்றத்தை அவமதித்து கட்டப்பட்ட விகாரை தொடர்பில் நீதிமன்றம் உரிய கரிசனை செலுத்தும்” எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts