Home Archive by category

வெள்ளவத்தை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெள்ளவத்தையில் திருடர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வீதியில் செல்வோரிடம் வழிப்பறியில் ஈடுபடும் கும்பல் ஒன்று நேற்று சிக்கியுள்ளது.

வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையிலுள்ள தமிழ் சங்கத்திற்கு அருகில் பெண் ஒருவரிடம் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

எனினும் அங்கிருந்தவர்களால் குறித்த கொள்ளைக்கும்பல் வளைத்து பிடிக்கப்பட்ட போதும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இலக்கத்தகடு இல்லாத முச்சக்கர வண்டியில் வந்த கும்பல் ஒன்றினால் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது..

வெளியில் செல்லும் பெண்கள் தங்க நகை அணித்து செல்வதை தவிர்க்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts