Home Archive by category

'இலங்கை வரும் சீனக்கப்பல்; இலங்கை தமிழர்கள் மட்டுமல்ல இலங்கையும் பாதிக்கப்படக்கூடாது'

இலங்கை தமிழர்கள் மட்டுமல்ல இலங்கையும் பாதிக்கப்படக்கூடாது என்பது தான் எங்கள் நோக்கமாக காணப்படுகிறது என தி.மு.கவின் தொழிற்சங்க தலைவரும், வழக்கறிஞருமான கரூர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.

யுவான் வாங் 05 என்ற சீனக்கப்பல் தொடர்பில் கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கைக்கு யுவான் வாங் 05 கப்பல் வருகின்ற பிரச்சினை தற்போது சர்வதேச பிரச்சினையாக காணப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

அத்துடன், குறித்த பிரச்சினைகள் மூலம் இலங்கை தமிழர்கள் மட்டுமல்ல இலங்கையும் பாதிக்கப்படக்கூடாது என்பது தான் தமது நிலைப்பாடு எனவும் சுட்டிக்காட்டினார். 

Related Posts