Home Archive by category

பிரதமர் ட்ரூடோவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்; நீதிமன்றில் கூறியது என்ன!

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு தாம் கொலை மிரட்டல் விடுத்ததாக நீதிமன்றில் நபர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி நடைபெற்ற பொது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

ஒன்றாறியோ மாகாணத்தின் கிட்ஸ்னர் பகுதியில் பிரதமர்  பங்கேற்று இருந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றின் போது குறித்த நபர் பிரதமரை அச்சுறுத்தி இருந்தார் பிரதமரை கொலை செய்வதாகவும்  பிரதமரிற்கு உடல் ரீதியாக காயங்களை ஏற்படுத்துவதாகவும், தோமஸ் டயர் என்ற நபர் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

வழக்கு விசாரணைகளின் போது தான் பிரதமர் ட்ரூடோவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததனை ஒப்புக் கொண்டுள்ளார்.
 
பிரதமருக்கு மிரட்டல் விடுத்தமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி குறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

பின்ன குறித்த நபர் சொந்தப் பினை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்   எனினும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இருபதாம் திகதி குறித்த நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதிக்க உள்ளது.

Related Posts