Home Archive by category

கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் இடம்பெற்று 21 வருடங்கள்...

இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் என கூறப்படும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய தாக்குதல் இடம்பெற்று இன்றோடு 21 வருடங்கள் ஆகின்றன.

கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்ட அதேவேளை 14 வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் இரண்டு கிபிர் விமானங்கள், ஒரு மிக் ரக விமானம், இரண்டு எம்1-17 , மூன்று கே-8 விமானம் உள்ளிட்டவைகள் அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது நாட்டின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.

இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts