Home Archive by category

திலினி பிரியமாலி சிறைச்சாலையில் இருந்து விடுதலை!

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலிக்கு அனைத்து வழக்கிலும் பிணை வழங்கப்பட்டமை காரணமாக அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையில் தொலைபேசி வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இன்று பிணை வழங்கப்பட்ட நிலையில் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Related Posts