கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்; சீனாவில் 20 கோடி பேர் பாதித்துள்ளனரா?
சீனாவில் புதிய வகை கரோனா வைரஸ் காரணமாக கடந்த 3 வாரத்தில் 24.80 கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தினசரி பாதிப்பு சராசரியாக ஒரு கோடியாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது, இது சீன மக்களின் 18.18 சதவீதம் என கணக்கிடப்படுகிறது.
உலக மக்கள் தொகையில் சுமார் 145 கோடியை தொட்டு சீனா முதலிடத்தில் உள்ளது யாவரும் அறிந்ததே. அங்குள்ள வூகான் மாகாணத்தில் கடந்த 2019 டிசம்பர் 8-ம் தேதி கரோனா தொற்று முதன்முதலில் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மெல்ல, மெல்ல உலகமெங்கும் பரவத் தொடங்கியது. கடந்த 2020 மார்ச் 3 வது வாரத்தில் இந்தியாவில் பரவத்தொடங்கியதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது. இதைதொடர்ந்து கரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 25-ம் தேதி முதல் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடை பிடிக்க வேண்டும். சோப்பு போட்டு கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. இதனால், தொற்று பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
இக்கால கட்டத்தில் கரோனா தடுப்பூசி மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டதால், பொதுமக்களிடம் அச்சம் விலகத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தேசிய ஊரடங்கு அமல் படிப்படியாக தளர்த்தப்பட்டன. மூன்று மாதம் முடங்கிய பொது போக்குவரத்து, மூடிக்கிடந்த தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படத் துவங்கின. ஆனால் இதே கால கட்டத்தில் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தொற்று பரவல் குறையவில்லை.
ஏப்ரல், மே மாதங்களில் வேகமெடுத்த தொற்று பரவலுக்கு இந்தி யாவில் உயிரிழப்பு அதிகரித்தது. இரண்டாம் கட்ட தொற்று பரவல் உயிரிழப்புகளால் மக்களிடம் ஏற்பட்ட அச்சம் போக்க மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியது. பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் முதல், இரண்டாம் தவணை தடுப்பூசிகளை மக்கள் செலுத்திக் கொண்டு கரோனா தொற்று அபாயத்தில் இருந்து விலகி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். கொரோனா அச்சம் முற்றிலும் நீங்கிய நிலையில், சீனாவில் தற்போது கரோனா மீண்டும் அதிவேகமாக பரவத்தொடங்கியுள்ளது.
கடந்த 2020 டிச.8 ல் ஏற்பட்ட பரவலை விட தற்போது தொற்று பாதித்தோர் எண்ணிக்கை சீனாவில் அதிகரித்துள்ளது. கடந்த 3 வாரத்தில் 24.80 கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தினசரி பாதிப்பு சராசரியாக ஒரு கோடி எனலாம். இது சீன மக்களின் 18.18 சதவீதம் என கணக்கிடப்படுகிறது. மேலும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. நிலைமை இவ்வாறிருக்க தினசரி பாதிப்பு 3,700 என சீன சுகாதார துறை பட்டியல் வெளியிட்டுள்ளது. இதனால் சீன அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர அக்கறை காட்டவில்லை என எண்ண தோன்றுகிறது. மேலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஏற்பட்ட தொழில் முடக்கத்தால் சீன மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதில் இருந்து மீண்டு வரும் நிலையில், தற்போது கொரானா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் கெடுபிடி காட்டக்கூடாது என்பதை சீன மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை விவரங்களை இனி அறிவிக்கப் போவதில்லை எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.