Home Archive by category

தமிழர்களை குறி வைத்து ஜனாதிபதி ரணில் போடும் திட்டம்!

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்திற்கு இன்னும் 51 நாட்களே உள்ளன. அரசியல் தீர்வு வழங்க நான் தயாராக இருந்தேன்.

ஆனால், அதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் இடமளிக்கவில்லை என சர்வதேசத்திற்கு காண்பிக்கும் முயற்சியை அதிபர் தற்போது கையாளுகிறார் என்று பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

அதிபர், தலைமையில் கடந்த 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

நாடாளுமன்றத்திலும், பொது இடங்களிலும் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பில் கருத்துரைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதிபர் தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் சமஸ்டி தொடர்பில் கருத்துரைக்கவில்லை.

காணி பிரச்சினைக்கு தீர்வு, பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைகைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்திற்கு தீர்வு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரச நிர்வாக கட்டமைப்பில் தமிழ் மொழி பேசுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கல், முறையான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

Related Posts