Home Archive by category

துபாயில் வசிக்கும் பாதாள உலக பிரமுகரின் கூட்டாளிகள் இருவர் துப்பாக்கிகளுடன் கைது

துபாயில் வசிக்கும் பாதாள உலக பிரமுகர் ஒருவரின் கூட்டாளிகள் என்று கூறப்படும் இருவர், இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் நீர்கொழும்பு மற்றும் பன்னல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொனஹேனவில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 31, 34 மற்றும் 48 வயதுடைய நீர்கொழும்பு, யக்வில மற்றும் கட்டான ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் இன்று நீர்கொழும்பு மற்றும் குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related Posts