Home Archive by category

மனோ அணி நாளை ஜனாதிபதியை சந்திக்கிறது

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி நாளை புதன்கிழமை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளது.சர்வகட்சி அரசாங்கம் மற்றும் சர்வகட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஏற்கனவே கடந்தவாரம் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஒரு கட்சியாக தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதியை சந்தித்திருந்தது. நாளைய சந்திப்பின் போதும் தமது மக்களின் அபிலாசைகள் குறித்து ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
 

Related Posts