Home Archive by category

வௌியேறியது கட்டார்!

இம்முறை கால்பந்து உலகக் கிண்ணப் போட்டித் தொடரை நடாத்தும் நாடான கட்டார் இந்த ஆண்டு கால்பந்து உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறிய முதல் அணியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (25ம் திகதி) இடம்பெற்ற செனகல் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை தொடர்ந்து போட்டியில் இருந்து கட்டார் அணி வௌியேறியுள்ளது.

போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் ஈக்வடாரிடம் கட்டார் தோல்வியடைந்தது.

அதன்படி, போட்டித் தொடரில் ´ஏ´ பிரிவின் கீழ் போட்டியிட்ட அவர்கள் இதுவரை பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளனர்.

Related Posts