Home Archive by category

இந்தியாவை 10 விக்கெட்டுகளால் வீழ்த்தியது இங்கிலாந்து அணி

ரி20 உலகக் கிண்ணப் போட்டி 2022 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அபார வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது அரையிறுதிப் போட்டி இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இன்று அடிலெய்டில் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ரி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2 ஆவது அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 168 ஓட்டங்களை பெற்றக்கொண்டது. அதிகபட்சமாக பாண்டியா, விராட் கோஹ்லி ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

இதனையடுத்து 169 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆரம்ப ஆட்டக்காரர்களான அலெக்ஸ் - பட்லர் அதிரடியாக விளையாடினர்.

4 ஓவர்கள் மீதம் உள்ள நிலையில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 13 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடும்.  

Related Posts