Home Archive by category

தாக்குதலுக்கான ஒத்திகை பொறுப்பற்றது; சீனாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா குற்றச்சாட்டு!

தாய்வான் விடயத்தில் சீனா ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

 

இந்த நடவடிக்கைகள் தற்போதைய நிலையை மாற்றுவதற்கான சீனாவின் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்றும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

தாய்வான் எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான தமது நீண்டகால இலக்குடன் அவர்கள் முரண்படுகிறார்கள் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

நான்காவது நாளாக இன்றும் தம்மீது தாக்குதல் நடத்துவதற்கு சீனா ஒத்திகை வான் மற்றும் கடல்வழியாக ஒத்திகை பார்த்ததாக தாய்வான் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் நான்சி பெலோசி தலைமையிலான அமெரிக்கக் குழு தாய்வான் சென்றதைத் தொடர்ந்து பதட்டங்கள் அதிகரித்துள்ளன.

தாய்வான் தமது கட்டுப்பாட்டில் உள்ள நாடு என உரிமை கோரிவரும் சீனாவிற்கு அமெரிக்கா மற்றும் தாய்வானின் நட்பு சவாலாக அமைந்துள்ளது.

இந்தநிலையில் தாய்வான் கடற்பரப்பில் நேற்றைய தினம் சீனக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் சென்றதாக தாய்வான் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இது உத்தியோகப்பூர்வமற்ற நடவடிக்கை என்பதனால் அவர்களை எச்சரிக்க, வான்பரப்பில் போர் விமானங்களை தாமும் அனுப்பியதாக தாய்வான் அறிவித்துள்ளது.

Related Posts