Home Archive by category

14ஆவது பிரிக்ஸ் மாநாடு நாளை பீஜிங்கில் – பிரதமர் மோடியும் பங்கேற்கிறார்!

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து பிரிக்ஸ் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.

இந்தாண்டு சீனா தலைமையில் 14ஆவது பிரிக்ஸ் மாநாடு நாளை பீஜிங்கில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும்படி சீன ஜனாதிபதி ஜின்பிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சீன ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நாளை பிரிக்ஸ் மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கலந்து கொள்ள உள்ளார். அவருடன் ரஷிய ஜனாதிபதி புதின், பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ, தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமாபோசா ஆகியோர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

 

Related Posts