Home Archive by category

"ரணில் வீட்டுக்கு போவது உறுதி: போராட்டம் தோல்வி அல்ல"

நேற்றைய போராட்டம் தோல்வி அல்ல வெற்றிக்கு அறிகுறி என  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

நேற்றைய மக்கள் எதிர்ப்பு போராட்டம் தோல்வி கிடையாது வெற்றியின் அடையாளம் ஒரு சில ஊடங்களும், கட்சி தலைவர்களும் கூறுவதை போல் போராட்டம் முடக்கமும், தோல்வியும் அல்ல வெற்றிதான்.

அரசாங்கம் எங்களின் போராட்டத்தின் அழுதத்துக்கு உள்ளாகி உள்ளது. அதோடு எமது அடுத்த போராட்டம் எப்படி அமையும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நேற்றைய தினம் பொலிசாரை குவித்த விதத்தில் இருந்து தெரிய வேண்டும்.

யாரு வெற்றி யாருக்கு தோல்வி என்று வசந்த முதலிகே, ஸ்ரீதம்பம தேரர் இவர்கள் வெளியில் வரும் வரை எமது போராட்டம் ஓயப்போவதில்லை மக்கள் அலை விரைவில் வீதிக்கு வரும் ரணில் வீட்டுக்கு போவது உறுதி அவருடைய ஆட்டமும் பொலிஸ் குவித்து பூச்சாண்டி காட்டுவதும் ஒரு போதும் மக்களிடையே பலிக்காது கோட்டாவின் நிலை பலருக்கு வரலாம் என்று தெரிவித்தார்.

Related Posts