Home Archive by category

ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் ஆபத்து!

தாக்குதலில் அணுமின் நிலையத்தின் சில பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் சபோரிஜிய அணுமின் நிலையத்தின் சில பகுதிகள் தாக்குதலால் தீவிரமாக சேதமடைந்துள்ளன என்று ஆலையின் ஆபரேட்டர் தெரிவித்துள்ளார்.

தெற்கு உக்ரைனில் உள்ள சபோரிஜிய அணுமின் நிலையத்தின் மீதான தாக்குதல்கள் நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மற்றும் ஒரு துணை கட்டிடம் ஆகியவற்றை தீவிரமாக சேதப்படுத்தியது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஷெல் தாக்குதல் ஆலையின் பாதுகாப்பான செயல்பாட்டிற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று உக்ரைனின் அரசு நிறுவனம் மேலும் கூறியது.

இந்நிலையில், சபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

அணுமின் நிலையத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்திகளால் தான் மிகவும் கவலையடைந்துள்ளதாக அணுசக்தி கண்காணிப்புக்குழுவின் தலைவர் ரஃபேல் மரியானோ க்ரோஸி தெரிவித்துள்ளார்.

எந்தவொரு இராணுவ நடவடிக்கையையும் அணுமின் நிலையத்தை நோக்கி செலுத்தினால் அது தீயுடன் விளையாடுவதற்கு சமமானதாகும், இது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அணுமின் நிலையத்தில் ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அது ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts