Home Archive by category

தீபாவளிக்கு பிறகு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

புதன் பெயர்ச்சி அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. கன்னி ராசியில் ஆட்சியில் உச்சம் பெற்றிருந்த புதன், அக்டோபர் 26க்குப் பிறகு துலாம் ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். ஏற்கனவே சூரியனும், சுக்கிரனும் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், புதனும் துலாம் ராசிக்கு செல்வது விநோதமாக பார்க்கப்படுகிறது. இந்த கிரக கூட்டணி சில ராசிகளுக்கு அணுகூலமாக இருக்கும் அதேவேளையில், சில ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

​ரிஷபம் 

புதன் துலாம் ராசிக்கு செல்லும் அதேவேளையில், ரிஷப ராசிக்கு 6ஆம் வீடான நோய் மற்றும் எதிரி ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறது. இது பொருளாதார நிலையை சற்று கடினமாக்கி, செலவுகளை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. தோல், தொண்டை பிரச்சனைகள் வரலாம். எதிரிகள் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் 12 ஆம் வீட்டிற்கு செல்லும் புதன் பகவான், நிதி சார்ந்த விஷயங்களில் சாதகமற்ற சூழலை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. செலவுகள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணபரிவர்த்தனையில் கவனமாக இருக்கவும். 

 
 

Related Posts