Home Archive by category

குல்தீப் யாதவின் சுழலில் தொடரை கைப்பற்றிய இந்திய அணி

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது  முதலில் ஆடிய தென் ஆபிரிக்கா 99 ஓட்டம்  சுருண்டது இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் இந்தியா – தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது.

முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. 27.1 ஓவர்களில் 99 ஓட்டம் பெற்று  சுருண்டது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 100 ஓட்டம்  எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, நிதானமாக முன்னேறியது.

துவக்க வீரராக களமிறங்கிய தலைவர்  ஷிகர் தவான் 8 ஓட்டம்  ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து இஷான் கிஷன் 10 ஓட்டம்  வெளியேறினார்.  பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷூப்மான் கில், 49 ஓட்டம்  சேர்த்து வெற்றிக்கான அடித்தளம் அமைத்தார். அதன்பின் ஸ்ரேயாஸ் ஜய்யர் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டம் , சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 2 ஓட்டம்  எடுக்க, 19.1 ஓவரிலேயே இந்தியா இலக்கை எட்டியது. 19வது ஓவரின் முதல் பந்தில் ஸ்ரேயாஸ் ஜய்யர் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். 3 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்களை  எடுத்த இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது

Related Posts