Home Archive by category

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் மின்வெட்டு நேரம்

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இன்றைய தினம் இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts