Home Archive by category

"இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துங்கள்"

ஐ.நாடுகள் மனித உரிமைகள் பேரவை, போர்க்குற்றம் தொடர்பில், இலங்கையை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். 

மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் இடம்பெற்ற, பொது நிகழ்வில், இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

இலங்கையில், போருக்கு பின்னர், பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட போதும், அவை பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைக்கவில்லை. 

காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பிலும், இலங்கை தமிழர்களுக்கு நம்பிக்கையில்லை.

தமிழர் பகுதிகளில், இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கின்றது. எனவே, காணாமல் போதல் மற்றும் போர்க்குற்றம் தொடர்பில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு, இலங்கையை பாரப்படுத்த வேண்டும். 

இதற்கு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகள், ஆதரவை வழங்க வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts