Home Archive by category

வவுனியாவில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: விசாரணைகள் ஆரம்பம்

வவுனியா வேப்பங்குளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் காணியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட மலசலகூடத்தினை புனரமைக்கும் பணியினை மேற்கொண்டிருந்த போதே குறித்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதன்போது 60 மில்லி மீற்றர் குண்டு ஒன்றும் கைக்குண்டு ஒன்றும், சிறிய ரக மிதிவெடி ஒன்றையும் பொலிஸார் இனங்கண்டனர்.

இதுதொடர்பான மேலதிக தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், இதுகுறித்து நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Related Posts