Home Archive by category

8 வருடங்களில் ஜனாதிபதி ஆணைக்குழுக்களிற்காக ரூ.504 மில்லியன் செலவு

கடந்த எட்டு வருடங்களில் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் நியமித்த, ஜனாதிபதி ஆணைக் குழுக்களுக்கு 504 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்தின் மூலம், இந்த தகவல் தெரியவந்துள்ளது.

கோட்டாபய தலைமையிலான அரசின் ஆட்சிக்காலத்திலேல் அதிகபட்சமாக 120 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளமை இதில் தெரியவந்துள்ளது.

இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்து ஆண்டுகளில், ஐந்துஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அதற்காக 254 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வெளியிடும் இந்த விசேட ஜனாதிபதி ஆணைக் குழுக்களின் முடிவுகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

எனவே, இந்தச் செலவினங்களிற்கு பலன் கிடைத்துள்ளதா என்பதை அளவிட முடியவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Related Posts