Home Archive by category

இங்கிலாந்து அணிக்கெதிரான 4ஆவது ரி-20: பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஏழு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 2-2 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது.

கராச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களையும் ரிஸ்வான் 88 ஓட்டங்களையும் பாபர் அசாம் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டொப்லே 2 விக்கெட்டுகளையும் லியாம் டாவிசன் மற்றும் வில்லி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து, 167 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் 163 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், பாகிஸ்தான் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹரி புரூக் மற்றும் லியாம் டாவ்சன் ஆகியோர் தலா 34 ஓட்டங்களையும் பென் டக்கட் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் நவாஸ் மற்றும் ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் மொஹமட் ஹஸ்னெய்ன் 2 விக்கெட்டுகளையும் மொஹமட் வாசிம் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் சார்பாக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹரிஸ் ரவூப் வீழ்த்தினர்.

Related Posts