Home Archive by category

தேர்தலை நடத்தி பாருங்கள்; சஜித் பாராளுமன்றில் சவால்

உடனடியாக தேர்தல் ஒன்றை நடத்தி பாருங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.

பாராளுமன்றில் வாய்மூல கேள்வி நேரத்தில் உரையாற்றிய அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பிரதமராக பதவியேற்க தமக்கும் வாய்ப்பு வந்ததாகவும் மக்களை ஏமாற்ற தாம் தயாராக இல்லை என்றும் அவர் கூறினார். 

இதன்போது ஆளுந்தரப்பின் உறுப்பினர்கள், தங்களது அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறும், உங்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்றும் தெரிவித்தனர்.

இதற்கு பதில் வழங்கிய சஜித், இப்போதே தேர்தல் ஒன்றை நடத்துமாறும், தமக்கிருக்கும் மக்கள் செல்வாக்கை காண்பிப்பதாகவும் தெரிவித்தார். 

Related Posts