Home Archive by category

"மீண்டும் ஒரு மக்கள் எழுச்சி"

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புடன் செயற்படத் தவறினால் மீண்டுமொரு மக்கள் எழுச்சி ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மிகவும் சவாலான காலப்பகுதியில் ரணில் ஜனாதிபதியானார் எனவும் இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் தற்போது அவரை விமர்சிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிலர் அவரை ஒகஸ்ட் 9 மற்றும் செப்டெம்பர் 9 ஆகிய திகதிகளில் அனுப்ப முயன்றனர். இருப்பினும், மக்கள் அதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அவர் தனது பொறுப்பை நிறைவேற்றத் தவறினால் மீண்டும் ஒரு பொது எழுச்சி ஏற்படும் என்றும்  பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.

Related Posts