Home Archive by category

வருமானத்தை குவிக்கும் தாமரைக் கோபுரம் தொடர்பில் வெளியான புதிய தகவல்

தாமரைக் கோபுர நுழைவுச் சீட்டு விற்பனை மூலம் முதல் நாளில் 2 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தாமரைக் கோபுர செயற்பாடுகளை 3 கட்டங்களாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாகவே தற்போதைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய முதல் நாளில் தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கு 2,662 பேர் வருகை தந்துள்ளனர்.

இரண்டாம் கட்ட செயற்பாடுகளை அடுத்த 2 மாதங்களுக்குள்ளும், இறுதி கட்ட செயற்பாடுகளை அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.- என்றார்.

Related Posts