Home Archive by category

ஐ.நா.வில் இந்தியாவின் ஆதரவு கிட்டினால் இலங்கைக்கு வெற்றி; மஹாநாமஹேவா நம்பிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா இந்தியாவின் ஆதரவை வெல்லும் பட்சத்தில் மேலும் 10 நாடுகள் சிறிலங்காவின் பக்கம் சாயும் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் , அரசியல் ஆய்வாளருமான பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார் .

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது;

சிறிலங்கா தொடர்பான பிரேரணை ஒக்ரோ பர் 7 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும் . 47 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கும் . இதில் 23 அல்லது 24 நாடு களின் ஆதரவைத் திரட்டினால் , பிரேர ணையை சிறிலங்காவால் தோற்கடிக்கக் கூடியதாக இருக்கும்.

சிறிலங்கா வெற்றிபெற வேண்டுமானால் அதற்கு இந்தியாவின் ஆதரவு மிக முக்கியம் . சிறிலங்காவுக்குச் சார்பாக இந்தியா வாக்களித்தால் மேற்குலகம் , ஆபிரிக்கா , கரீபியன் தீவுகளில் உள்ள சுமார் 10 நாடுகள் சிறிலங்காவுக்கு நேசக்கரம் நீட்டும்.

இந்தியா நடுநிலை வகித்தால், பிரேரணை நிறைவேறும் . சிறிலங்கா உள்ளகப் பொறிமுறை யோசனையை முன்வைக்க வேண்டும் . 10 ஆண்டு கால மனித உரிமை திட்டத்தை நடை முறைப்படுத்தவேண்டும் என்றார் .

Related Posts