Home Archive by category

பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட நாய்; இறுதி அஞ்சலி செலுத்தி இந்திய ராணுவம் நெகிழ்ச்சி

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணித்த பாடி கேமரா அணிந்த ஆக்சல் என்ற ராணுவ நாயை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதில் ஆக்சலுக்கு ராணுவ வீரர்கள் இன்று மலர் வளையம் வைத்து இறுதி மரியாதையை செலுத்தினர்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவத்தின் மோப்ப நாய் ஆக்சலை பயங்கரவாதிகள் சுட்டதால் உயிரிழந்தது. இதையடுத்து இந்திய ராணுவ வீரர்கள் ஆக்சலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். முன்னதாக, ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் நாட்டு பயங்கரவாதிகள் 3 பேர் இருப்பதாக இந்திய ராணுவத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இந்திய ராணுவத்தினர் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவத்தின் மோப்ப நாய் ஆக்சல் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது.

Related Posts