Home Archive by category

'கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது'

கோட்டா கோ கம போராட்டத்தின் ஈடுபட்ட இளைஞர்கள் தற்போது அரசாங்கத்தினால் கைது செய்யப்படுகின்ற நடவடிக்கையினை ஏற்றுக் கொள்ள முடியாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால் அதில் தமிழர் தரப்பிற்கான தீர்வினை நோக்கிய பயணத்தின் ஆரம்பமாக இருக்க வேண்டும் என்றும் குறித்த அரசாங்கத்தில் அனைத்து கட்சிகளும் அங்கம் வகிக்கின்ற வேளையிலே தமிழர்களின் பிரச்சினை தொடர்பிலே பேசப்பட்டு அதற்கான தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் இதன் போது குறிப்பிட்டார்.

அத்துடன் கோட்டா கோ கம போராட்டத்தின் ஈடுபட்ட இளைஞர்கள் தற்போது அரசாங்கத்தினால் கைது செய்யப்படுகின்ற நடவடிக்கையினை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், தமிழினர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்பதை நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன் என்பதையும் இதன்போது சுட்டிக்காட்டினர்.

மேலும் சிங்களத் தரப்புக்களிடமிருந்து நாம் ஏமாறியதைக் காட்டிலும் தமிழ் தரப்பினரிடமிருந்து ஏமாந்தமையே அதிகமாக உள்ளது என்றும் இதன்போது தெரிவித்தார்.

Related Posts