Home Archive by category

செல்வச் சந்நிதி தேர்த் திருவிழாவில்70 பவுண் நகைகள் திருட்டு!

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச் சந்நிதி  ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் சுமார் 70 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்க நகைகளை பறிகொடுத்தவர் 18 பேர் முறைப்பாடு வழங்கியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

வரலாற்றுச் சிறப்புபிக்க தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய தேர்த திருவிழா இன்று இடம்பெற்றது.

பல்லாயிரக கணக்கான அடியவர்கள் பங்கேற்று தமது நேரத்திக் கடன்களை நிறைவேற்றினர்.

தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் திருடர்கள் கைவரிசையை காட்டியள்ளனார் தங்க நகைகளை பறிகொடுத்த 18 பேர் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் சுமார் 70 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

நாளைய தினம் தீர்த்தத் திருவிழா என்பதனால் அதிகளவான அடியவர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது . எனவே அடியவர்கள் தமது நகைகள் மற்றும் பணத்தில் அவதானம் தேவை என்று பொலிஸார் கேட்டுள்ளனர்.

Related Posts