பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் காலமானார்
பிரித்தானியாவில் 70 ஆண்டுகளாக ஆட்சியில் நீடித்த மஹாராணி இரண்டாம் எலிசபத் இன்று (08) காலமானார்.
96 வயதான அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து பெல்மோரல் மாளிகையில் தங்க வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்தார்.
அவரது குடும்பத்தார் அனைவரும் பெல்மோரல் மாளிகையில் திரண்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று அவர் காலமானதாக பெக்கிங்ஹெம் மாளிகையினால் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1952ஆம் ஆண்டு பிரித்தானிய மஹாராணியாக முடிசூட்டிக் கொண்ட அவர், நீண்டகாலம் ஒரு அரசுக்குத் தலைமைத்தாங்கியவர் என்ற பெருமைக்குரியவராவார்.