Home Archive by category

ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் குண்டு வெடிப்பு! 18 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியானது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் 15-ம் திகதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

இந்த நிலையில் ஹெராட் மாகாணத்தில் உள்ள மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் மதகுரு உள்பட 18 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 21 - க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

Related Posts