Home Archive by category

வாக்கெடுப்பிலிருந்து விலக பலர் தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால  பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ள நிலையில், வாக்கெடுப்பிலிருந்து விலகியிருக்க, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிஸ் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்க்கட்சியில் இணைந்து சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த தான் உட்பட 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் இடைக்கால பாதீடு மீதான வாக்கெடுப்பிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Related Posts