Home Archive by category

யாழ்ப்பாண பெண்களின் செய்த மோசமான செயல்

யாழ்ப்பாணம்-பொம்மைவெளி பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் மறைந்திருந்து போதைப்பொருளை பயன்படுத்திக் கொண்டிருந்த இரு பெண்களை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று (29) இரவு கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து 2 கிராம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு பெண்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் 28 மற்றும் 29 வயதுடையோர் எனவும் , அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Related Posts