Home Archive by category

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலய கொடியேற்றம்-படங்கள் இணைப்பு

வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வுகள் இன்று (27) சனிக்கிழமை மாலை கொடியேற்றத்தோடு ஆரம்பமாகியது.

பிரதமகுரு சிவசிறி உலக குருநாதன் ஐயர் தலைமையில் மஹோற்சவ பூசைகள் இடம்பெற்று மாலை 4:30 மணியளவில் கொடியேற்றப்பட்டு மஹோற்சவம் ஆரம்பமானது.

செப்டெம்பர் 8 ஆம் திகதி சப்பைரதத் திருவிழாவும், மறுநாள் 9 ஆம் காலை 9 மணிக்குத் தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

செப்டெம்பர் 10 ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும், அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும், மறுநாள் 11 ஆம் திகதி பூக்காரர் பூஜையும் நடைபெறவுள்ளது.

Related Posts