Home Archive by category

தமிழர்களை கொன்று எங்கே புதைத்தீர்கள்;செல்வம் ஆவேசம்

சிங்கள் மக்கள் மீது அவசர காலச் சட்டம் பயன்படுத்தப்படுகின்ற போது தற்போது அதிகளவில் பேசப்படுகிறது.

இதே சட்டத்தை பயன்படுத்தி தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை தொடர்பில் எவரும் கரிசனைக்கொள்ளவில்லை என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
 
இந்த அவசர காலச் சட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவதாக தெரிவித்த அவர்,

வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் எங்கே எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

Related Posts