Home Archive by category

தனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்குவதற்கு எதிராக தடையுத்தரவு பெற்றார் அக்தர்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷொயிப் அக்தர்,  தனது வாழ்க்கை வரலாற்றுக் கதையை திரைப்படமாக்குவதற்கு எதிராக நீதிமன்றத்தின் மூலம் தடை உத்தரவு பெற்றுள்ளார்.

வேகப்பந்துவீச்சாளரான ஷொயிப் அக்தர் 'ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்' என வர்ணிக்கப்பட்டவர். 

அவரின் வாழ்ககை வரலாற்றை, 'ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்' எனும் பெயரில் திரைப்படமாக்கும் நடவடிக்கையில் ஒரு குழுவில் ஈடுபட்டிருந்தனர். 

பராஸ் கைசர், சொயிப் அஹ்மத் கான், ஹசன் ஸாஹிட் ஆகியோரினால் இப்படம் உருவாக்ப்பட்டு வந்தது. 

இப்படத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை எனக் கூறிய ஷொயிப் அக்தர், இப்படத் தயாரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

தனது ஆட்சேபனையையும் மீறி இப்படம் தயாரிக்கப்பட்டு வருவது குறித்து அக்தர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இப்படத் தயாரிப்புக்கு எதிராக நீதிமன்றத்தின் மூலம் தான் தடையுத்தரவு பெற்றுள்ளதாக ஷொயிப் அக்தர் இன்று அறிவித்துள்ளார்.

Related Posts