போர் பதற்றம்: உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்க தயாராகும் பிரித்தானியா
உக்ரைனுக்கு நூற்றுக்கணக்கான நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை பிரித்தானியா அனுப்பும் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட உதவிகளுக்கு மேலதிகமாக இந்த புதிய ஆயுத உதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போர்க்களத்தை உக்ரைனுக்குச் சாதகமாக மாற்றும் நோக்கில் வேறு நாடுகளை விட பிரித்தானியா அதிக ஆயுதங்களை வழங்கி வருகின்றது.
முன்னதாக, மேற்கத்திய நட்பு நாடுகளின் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தார்.
மேற்குலக நாடுகளும் போர் விமானங்களை அனுப்புவது முக்கியம் என்று உக்ரைன் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.