Home Archive by category

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தார் ஐ.நா. பிரதிநிதி

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

இன்று காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் மகேசனை டேவிட் மெக்லாக்லன்-கார் சந்தித்தார்.

இதன்போது இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரும் உடனிருந்தார்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையின் காரணமாக வாழ்வாதாரம் மற்றும் கடற்றொழிலுக்கு உள்ள சவால்கள் குறித்து இதன்போது இவர்கள் விரிவாக அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்துக் கொண்டனர்.

ஐ.நா. அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் கடந்த ஓகஸ்ட் 16 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்ததுடன் பல்வேறு தரப்புக்களையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts